Jet Airways Flight: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது மற்றும் மூக்கில் ரத்த கசிவு!
மும்பையில் இருந்து ஜெய்பூருக்குஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 737
விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம்பறக்க ஆரம்பித்த சிறிது
நேரத்திலேயே விமானத்தில் இருந்த பயணிகளில் பலருக்கும் மூக்கு மட்டும்
காதுகளில் இருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.
இதனால் உடனடியாக விமானம் மும்பையிலேயே தரையிரக்கப்பட்டது. 166 பயணிகளில் 30
பேருக்கு மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் கசிந்துள்ளது. மேலும் பலருக்கு
தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 8 பயணிகளின் உடல்நிலை மிகவும்
மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாகஜெட் ஏர்வேஸ் அதிகாரிலலித் குப்தா கூறுகையில் ‘ விமானம் பறக்க
தொடங்கும் முன் விமானி ‘ bleed switch’ என்றபொத்தானை அழுத்த மறந்ததால்இந்த
சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட எல்லா பயணிகளும் தற்போது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தவறுக்கு காரணமான
விமானிகள் மற்றும் விமானத்தின்குழுவினரிடம்விசாரணை செய்யப்பட்டு, உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Comments
Post a Comment